Wednesday 20 April 2011

மனம் என்னும் நதி

மனம் என்னும் நதி

பல ஊற்றுகளின் எண்ணங்கள் சுமந்து
ஓடிக்கொண்டிருக்கின்றது என் மன நதி
வண்டல்களாய் குப்பையும் அழகாய் கூழாங்கற்களும்
சேகரித்துக்கொண்டு குளுமையாய் ஓடிக்கொண்டிருக்கின்றன பொழுதுகள்

என் கடல் எங்கே என்று நித்தம் தெரிந்த கேள்விக்கு
தெரியாத வழியில் தேடிக்கொண்டிருக்கின்றேன்

ஏக்கங்களும் ஆசைகளும் தேடல்களும்
அணைபோடாத நதியாக ஓடிக்கொண்டிருக்கின்றது
என் மன நதி

பாலங்கள் கட்டுமானித்து கதைகள்
பேசிச்சென்ற ஒற்றைமனிதர்கள் ஏராளம்
அவர்கள் என் உணர்வுகளுக்கு வழிப்பயணியாய் வந்தவர்கள்

என்னுள் குதித்து என் உணர்ச்சிகளில் முத்துகுளிப்பவர்கள் மீதமிருப்போர்

யாராயினும் என் நதியின் வளம் சேர்க்கின்றனர்

ஓடிக்கொண்டிருக்கும் என் மன நதி.

No comments:

Post a Comment